Saturday, August 14, 2010

குத்துமதிப்பா அடிச்சதுக்கே...


துவக்கமும் முடிவும் மனிதனுக்கு குழப்பம்.நடுவில் வாழும் வாழ்க்கையோ அவன் கையில் அடக்கம் ...
படிச்சதை செய்றது ஒரு வகை ..பிடிச்சதை செய்றது ஒருவகை. பிடிச்சதை படிச்சி செய்றது ஒருவகை ..படிச்சதை பிடிச்சி செய்றது ஒருவகை. எதையும் பிடிச்சி படிச்சி செய்றது தனிவகை ...
பணமும் குணமும் இன்றைய சமுதாய நடைமுறையில் மனிதர்க்கு இரு கால்கள் அல்லது கைகள் ..
லட்சியம் இல்லாத வாழ்க்கை பாதைகள் இல்லாத காடு..அலட்சியம் நிறைந்த வாழ்க்கை சொரிமணல் நிறைந்த பாலை...
உன்னை அறிந்தால் உலகத்தில் நீ வாழலாம்...பிறரையும் நீ அறிந்தால் உயர்வாய் நீ வாழலாம்...
தன்னையும் முன்னேத்தி பிறரையும் முன்னேத்துறான் பாரு, அவன்தான் தன்னிகரற்ற தலைவன்...
தான் முன்னேரட்டாலும் பரவா இல்லன்னு பிறர் முன்னேர்ற்றதில முக்கிய பங்கு வகிக்கிறான் பாரு, அவன் தன்னலமற்ற தலைவன்..
தன்னை முன்னேத்த பிறரை கவுத்துறவன் இருக்கானே அவன் தரங்கெட்ட தன்னல பிராணி...
தன் வேலைய கண்ணும் கருத்துமா செய்றவனும், பிறர் வேலயில தலையிடாதவனும் உருப்படுவான்...
தன்னை பற்றி ஒரேயடியா பெருமை படுரவனும் , பிறர் மேல் எப்போதும் பொறாமை படுரவனும் உருப்படுவது சிரமம்...
தன்னை பற்றி தம்பட்டம் அடித்து கொள்ரவனும், பிறரை தன் கீழ் மட்டம் தட்டுரவனும் மேம்படுவது கடினம்...
வளமான வாழ்க்கை என்பது ஒரு குரிப்பிட்ட சூத்திரம் தான்...அதை கற்று கொண்டால் யாரும் வளமான வாழ்க்கை வாழலாம் ....
குத்துமதிப்பா அடிச்சதுக்கே இப்படின்னா குறிவச்சி அடிச்சா எப்படியாகும் ?
அரைகுறை நம்பிக்கையோடு இவ்வளவு தூரம் பயணம்!
முழுநிறை நம்பிக்கை கொண்டால் எவ்வளவு உயரம் பயணம்!
--
முன்னேறு...முன்னேற்று...முன்செல்லு...
முயல்வதும் விழுவதும் எழுவதும் மீண்டும்
முயல்வதும் முழுமையும் வெல்வதற்கே .................. மோசேகு