Tuesday, May 31, 2011

கோவில் உண்டியல்- பிச்சைகாரர்களும் பிச்சை போடுமிடம்









கோவில் உண்டியல்- பிச்சைகாரர்களும் பிச்சை போடுமிடம்..

எங்கோ அலைந்து திரிந்து பிச்சை எடுக்கிறான் மனிதன்
இறைவனின் திருவருளால் ...
இங்கே இருந்த இடத்திலே பிச்சை எடுக்கிறான் இறைவன்
மனிதனின் திருவருளால் ...
இங்கே களவாடிய பணம், கருப்பு பணம்,
ஏமாற்றிய பணம், எளியவரின் பணம்,
பயந்தோர் பணம், மூடர் பணம்
மற்றும் பொருள் அனைத்தும் போடப்படும் ...
இறைவனிடம் கையேந்தினால் எல்லாம் கிடைக்குமாம்
பின் ஏன் இறைவனை எதற்கு கையேந்த வைத்தீர்கள்
இறைவன் கேட்டதை கொடுப்பவன் என்கிறிர்கள்-பின் ஏன்
அவனுக்காக நீங்கள் பிச்சை கேட்கிறிர்கள்
இறைவன் எல்லாம் நிறைந்தவன் என்பது உண்மையென்றால்
இறைவன் கோவிலில் உண்டியல் எதெற்கு?
அதற்கு கடும் காவலும் எதற்கு?
அதையும் மீறி களவு போவது எதனால்?

புகைபிடிப்பவன்(ர்)ள்)



நடமாடும் புகைபோக்கி

மண்ணுலக மாசுபடுத்தி

தன் நலம் கெடுத்து

பிறர் நலமும் கெடுப்பான்

கொஞ்சம் டென்ஷன் என்பான் கொஞ்சம் ப்ராப்ளம் என்பான்

புகை பிடித்து பிடித்து

அதை குடித்து குடித்து

கொஞ்சநாளில் நிரந்தர டென்ஷன்,

ப்ராப்ளம் என்றே அலைவார் நோயால்

புகை பிடிப்பது ஸ்டைல் என்பவன் மடையன்

புகை பிடித்தால் டென்ஷன் குறையும் என்பது

சாக்கடையை குடித்தால் தாகம் தீரும் என்பது போலவே

சிகரட் என்பான் பீடி என்பான் சுருட்டு என்பான்

ஒருநாள் சுருண்டு போவான் நோயால் ..

வேண்டாம் என்றாலும் விடமாட்டான்

தானாய் புரிவான் ஒருநாள் தன்னலம் குன்றி போகும்போது...

புகையால் கருப்பாகப்போவது தன் வாய் மட்டுமல்ல

தன் வாழ்க்கையும் தான் என்று ....

புகை பிடிப்பதேன்பதும் கொஞ்சம்

கொஞ்சமாய் விஷம் உண்பதும் ஒன்றே

தற்கொலை செய்பவன் விஷம் உண்கிறான்..

தற்கொலை செய்பவர்கள் கோழைகலாம்.. சமுகம் சொல்கிறது..

அப்படிஎன்றால் புகை பிடிப்பவர்களும் கோழைகள் தானோ...