Wednesday, March 3, 2010

வாழ்க்கை கல்வி வியாபாரிகளும் கடவுள் வியாபாரிகளும்(Life education& God business)

வாழ்க விழிப்புணர்வு பெற்றுகொண்டிருக்கும் சமுதாயம் ......
இன்றைய உலகம் வாழக்கை கல்வி மற்றும் கடவுள் ஏமாற்று வியாபாரம் ஜோராய் நடக்கும் சந்தை ...... கடவுளை தெரிந்தவனும் இல்லை புரிந்தவனும் இல்லை ..அந்த கடவுள் அண்ணனும் இந்த ஏமாற்று வியாபாரிகள் கூட சேர்பவர் அல்ல ..அந்த கடவுள் அண்ணனால் இவுலகம் படைக்க பட்டேதேன்றால் இவுலகில் இன்னும் நம்மால் புரிய முடியாத விசயங்கள் என்ன முடியாதவை ..கடவுள் அண்ணனால் படைக்கப்பட்ட விசயங்களையே புரிய முடியாத ஜென்மங்கள் அந்த கடவுள் அண்ணனின் மகன் போலவும் நண்பன் போலவும் அவரை புரிந்து விட்டதாகவும் அப்பாவி மனிதர்களை அந்த கடவுள் அண்ணனிடம் கொண்டு சேர்க்கும் ஏஜெண்டுகளாக தூதுவர்களாக தங்களை அறிவித்து கொண்டு பணம் பறித்து புகழ் உருவாக்குவது எவ்வளவு ஏமாத்து... அதாச்சும் பரவா இல்ல தான்தான் கடவுள் என சொல்லும் அவதாரிகள் எனும் கபடவேடதாரிகளை என்ன சொல்வது .....மக்கள் நோயை தீர்ப்பதாகவும் அமைதி மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறும் இவர்கள் கை தேர்ந்த மருத்துவர்களா மனநல நிபுணர்களா இல்ல கோமாளிகளா . வாழ்வது எவ்வாறு வளர்வது எவ்வாறு என கற்று கொடுக்கும் இவர்களின் வழிகளை பின்பற்றி வீணாய் போனவர்கள் எத்தனையோ ... பாவம் ....இவர்களை நம்ம்பும் மனிதர்களை என்ன சொல்வது...அறியாமை நீக்குங்கள்
கவனமாய் நடக்காவிட்டால் நமக்கு துன்பம் தரும் பொருள்களை நம்மிடம் நிரந்தரமாய் விற்று விடுவார்கள் இந்த வாழ்க்கை கல்வி வியாபாரிகளும் கடவுள் வியாபாரிகளும் ...
காமகோடி நித்தியானந்த பிரேமானந்த தேவநாத ..........அட கலக்குரிங்கப்பா
அப்பாவி மனிதர்களே இந்த அற்ப மனிதர்களின் வியாபாரத்திற்கு பலியாகிவிடாமல் கவனமாய் சுய விழிப்புணர்வுடன் வாழ்வை சுவையுங்கள் ....

No comments:

Post a Comment