Tuesday, May 31, 2011

கோவில் உண்டியல்- பிச்சைகாரர்களும் பிச்சை போடுமிடம்









கோவில் உண்டியல்- பிச்சைகாரர்களும் பிச்சை போடுமிடம்..

எங்கோ அலைந்து திரிந்து பிச்சை எடுக்கிறான் மனிதன்
இறைவனின் திருவருளால் ...
இங்கே இருந்த இடத்திலே பிச்சை எடுக்கிறான் இறைவன்
மனிதனின் திருவருளால் ...
இங்கே களவாடிய பணம், கருப்பு பணம்,
ஏமாற்றிய பணம், எளியவரின் பணம்,
பயந்தோர் பணம், மூடர் பணம்
மற்றும் பொருள் அனைத்தும் போடப்படும் ...
இறைவனிடம் கையேந்தினால் எல்லாம் கிடைக்குமாம்
பின் ஏன் இறைவனை எதற்கு கையேந்த வைத்தீர்கள்
இறைவன் கேட்டதை கொடுப்பவன் என்கிறிர்கள்-பின் ஏன்
அவனுக்காக நீங்கள் பிச்சை கேட்கிறிர்கள்
இறைவன் எல்லாம் நிறைந்தவன் என்பது உண்மையென்றால்
இறைவன் கோவிலில் உண்டியல் எதெற்கு?
அதற்கு கடும் காவலும் எதற்கு?
அதையும் மீறி களவு போவது எதனால்?

No comments:

Post a Comment