Saturday, March 3, 2012

அவர்கள் போர்குற்றவாளிகள் அல்ல -ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

 கொலைகாரர்களை காட்டிகொடுக்கமாட்டோம்
அவர்களை காட்டிகொடுத்தால் நாங்களும் அல்லவா மாட்டிகொள்வோம்
ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

அவர்கள் போர்குற்றவாளிகள் அல்ல
அவர்கள் போர்குற்றவாளிகள் என்றால் நாங்கள்  ?
 ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

அவர்கள் செய்தது இனப்படுகொலை அல்ல 
அவர்கள் செய்தது இனப்படுகொலை என்றால் நாங்கள் செய்தது ?நாங்கள் செய்வது ?
ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

அவர்கள் செய்தது மனித உரிமை மீறல் அல்ல
 அவர்கள் செய்தது மனித உரிமை மீறல் என்றால் நாங்கள் செய்தது ?
ஏனென்றால் நாங்களும் கொலைகாரர்கள் தான்

அவர்கள் கொலைகாரர்கள் அல்ல ..மிக நல்லவர்கள்
அப்படி நாங்கள் சொல்லவில்லை என்றால்
அவர்கள்  எங்களை மாட்டிவிட்டு விடுவார்கள்-இல்லாவிட்டால்
எங்கள் எதிரியோடு சேர்ந்து விடுவார்கள்

நாங்கள் நல்லவர்கள் அல்ல
நல்லவர் போல் நடிப்பவர்கள்
எந்தவொரு இனத்தின் உணர்வையும் மதிக்காத
இறையாண்மை பேசும் இழியவர்கள்
 இப்படிக்கு
இந்தீயன்

படுகொலை செய்தவன் குற்றவாளி ..அதோடு
அப்படுகொலைக்கு உதவியவனும் குற்றவாளி அல்லவா-பயில்வான்

No comments:

Post a Comment