Wednesday, April 6, 2011

மாற்றம் வேண்டும் முன்னேற்றம் வேண்டும் என்றால்..

மாற்றம் ஒன்று தான் மாறாதது ..... முன்னேற்றத்தின் ஆணிவேர் மாற்றம் தான்.. உண்ணும் உணவில் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம் உடுத்தும் உடையில் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம் செய்யும் வேலையில் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம்.. பழகும் பேரிடம் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம் ... வேலையாளிடம் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம் வணங்கும் கடவுளிடம் சலிப்பு ஏற்பட்டால் மாற்றுகிறோம்... இப்படி அனைத்திலும் மாற்றங்கள் தான் வாழ்வில் ஆர்வத்தையும் அர்த்தத்தையும், ஏன் வாழ்வாதாரத்தையே உருவாக்குகின்றன.... அப்படி இருக்கும் போது நம்மை ஆள்பவர்களை/நமக்கு சேவை செய்ய போகிறவர்களை தேர்ந்தெடுக்கும் நிகழ்வான நமது மக்களாட்சி கடமை/உரிமையான வாக்கு செலுத்தும் நாளில் மாற்றத்தை உருவாக்கி முன்னேற்றதிர்க்கு வித்திடுவோம் ....

No comments:

Post a Comment